Saturday, 21 May 2016

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கியுடன் வந்தவர் மீது துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு அருகே நேற்று வெள்ளிக் கிழமை துப்பாக்கியுடன் சென்ற ஒருவர்மீது பாதுகாப்புப் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.வயிற்றில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வெள்ளை மாளிகைக்கு அருகில் உள்ள சோதனைச் சாவடியை நோக்கி மேற்படி நபர் துப்பாக்கியை சுழற்றி யவாறு வந்ததை அடுத்தே அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் இடம்பெற்றபோது ஜனாதிபதி பராக் ஒபாமா மெரிலேண்டில் கோல்ப் விளையாடிக் கொண்டிருந்தார் என்றும் உப ஜனாதிபதி ஜோ பைடேனே வெள்ளை மாளிகையில் இருந்தார் என்றும் பாதுகாப்பு அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.வெள்ளை மாளிகையின் பாதுகாப்பைக் கேள்விக்குட்படுத்தும் வகையில் இவ்வாறு பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment