Thursday, 26 May 2016

கல்விக்காக உயிரைக் கொடுக்கும்...

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்து மாணவர்கள் கல்வி கற்பதற்காக படும்பாட்டை பாத்தால் உடம்பு நடுங்குகிறது.மலை உச்சியில் இருக்கும் அவர்களது கிராமத்தில் இருந்து மலைக்குக் கீழே இருக்கும் பாடசாலைக்குச் செல்வதற்காக அவர்கள் கயிற்றைப் பிடித்தவாறு கீழே இறங்குகின்றனர்.

பாடசாலையில் இரண்டு வாரங்கள் தங்கிவிட்டு தாய்,தந்தை மற்றும் உறவினர்களைப் பார்ப்பதற்காக மீண்டும் அந்த சிறுவர்கள் கூட்டமாக மலை ஏறுகின்றனர்.மாதத்துக்கு இரண்டு முறை இந்த ஆபத்தான பயணத்தை அவர்கள் மேற்கொள்கின்றனர்.

6 முதல் 15 வயது வரையான மாணவர்கள் இந்த ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர்.இந்தப் பயணத்தின்போது இதுவரை 8 பேர் மரணித்தும் உள்ளனர்.மிகவும் ஆபத்தான பயணத்தின் காட்சியை கீழுள்ள படங்களில் பாருங்கள்.









No comments:

Post a Comment