Tuesday, 24 May 2016

பிரிட்டனில் வெடி குண்டு மிரட்டல் ; 21 பாடசாலைகள் மூடப்பட்டன

பிரிட்டன் கண்டபேரியில் உள்ள பாடசாலைக்கு வந்த அனாமோதையா தொலைபேசி அழைப்பால் கென்ட் முதல் நியுகாசல் வரையான இடங்களில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டன.

மேற்படி பாடசாலையில் வெடி குண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும் அது வெடித்து உங்கள் மாணவர்களின் தலைகள் பறக்கும் என்றும்  தொலைபேசியில் பேசிய நபர் கூறி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து  பல பாடசாலைகளுக்கும்   இவ்வாறான மிரட்டல் அழைப்புகள் சென்றன.இதனால் பாடசாலை நிர்வாகங்கள் மாணவர்களை உடன் வெளியேற்றி பாடசாலைகளை மூடின.21 பாடசாலைகள் இவ்வாறு மூடப்பட்டன.

இதனால்,பரீட்சை எழுதிக்கொண்டிருந்த அதிகமான மாணவர்களும் பரீட்சையை இடைநடுவில் நிறுத்திவிட்டுச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.


No comments:

Post a Comment