இலங்கையில் ஏற்பட்ட வெள்ள மற்றும் மண்சரிவு அனர்த்தம் காரணாமாக
21,600 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.இதற்குள் தேசமடைந்த வாகனங்கள் மற்றும் தளபாடங்கள் போன்றவை உள்ளடக்கப்படவில்லை
என்றும் அரசு தெரிவித்துள்ளது.அத்தோடு,உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்துள்ளது.
கொழும்பு போன்ற இடங்களில் வெள்ளம் இப்போது வழிந்து வருகின்றபோதிலும்,தொடர்ந்தும்
மழை பெய்யும் அபாயமே உள்ளது.தென் மேல் பருவம் திங்கள் கிழமை ஆரம்பமானதால் இன்னும் ஓரிரு
நாட்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது.
மலையகத்தின் 48 பிரேதேச செயலகப் பிரிவுகளில் மண் சரிவு அபாயம்
இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே,இடம்பெற்ற மண் சரிவில் இன்னும் 108 பேர் புதையுண்ட
நிலையில் இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
No comments:
Post a Comment