Monday, 6 June 2016

இணையத்தள விளையாட்டால் பறிபோனது சிறுவனின் உயிர்

இணையத்தளத்தில் விளையாடிக் கொண்டிருந்த பேர்மிங்ஹாமைச் சேர்ந்த 12 வயது மாணவன் தன்னைத்தானே வெட்டிக் கொன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தனது வீட்டு படுக்கை அறையில் இருந்து இணையத்தளத்தில் விளையாடிக் கொண்டிருந்த கானல் ஹவ்டன் என்ற இந்தச்  சிறுவன் அந்த விளையாட்டில் வரும் காட்சிக்கு ஏற்ப செயற்பட்டே  தன்னைத் தானே வெட்டிக் கொன்றிருக்கின்றான் .இதுவும் விளையாட்டு என்று நினைத்தே அந்தச் சிறுவன் அவ்வாறு செய்திருக்கிறான்.

படுக்கை அறையில் இரத்த வெள்ளத்தில் மகன் கிடப்பதைக் கண்ட தாய் அவனை உடனடியாக வைத்தியசாலையில் சேர்த்தபோதிலும் அவனைக் காப்பாற்ற முடியவில்லை.

இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு இணையத்தள விளையாட்டில் சிறுவர்கள் ஈடுபடுவதற்கு பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது என்ற செய்தியையும் கூறியுள்ளது.

No comments:

Post a Comment