Saturday, 4 June 2016

ரஷ்யாவுக்கு எதிராக 35,000 துணைப் படைகள்; போலந்து தயார்படுத்துகின்றது

போலந்துக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் பிணக்கைத் தொடர்ந்து போலந்து ரஷ்யாவுக்கு எதிராக 35 ஆயிரம் துணைப் படைகளைத் தயார்படுத்தத் திட்டமிட்டுள்ளது.நேடோ நாடுகள் பலவும் போலந்துக்கு உதவத் தயாராக உள்ளன.

நேடோ படையின் ஒரு படைப் பிரிவு போலந்தில் நிறுத்தப்படும்.ஏனைய மூன்று படைப்பிரிவுகள் எஸ்டோனியா,லத்வியா மற்றும் லிதுனியா போன்ற நாடுகளில் நிறுத்தப்படவுள்ளன.மொத்தமாக 4,000 படையினர் சுழற்சி முறையில் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வர்சொவில் ஜூலை மாதம் 8 மற்றும் 9 ஆகிய திகதிகளில் இடம்பெறவுள்ள நேடோவின் உச்சி மாநாட்டில் இந்த விடயம் இறுதி செய்யப்படும்.நேட்டோ அமைப்பின் பல நாடுகள் ரஷ்யாவின் எல்லையில் தங்களது படைகளை நிறுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment